
அரசியல்லுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன், என்றார். இனி மேல் பாக் தீவரவாதி உடன் சண்டை போட யார் இருக்க ?