Wednesday, March 31, 2010

சாப்பாடு இல்லாட்டி பரவா இல்லை, செந்தமிழ் மாநாடு இருக்கு ...

East OR west Tamilnadu is ...........?

வாழ்க தமிழ் : நம்மா அரசின் சாதனை இதே

கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில்,என்ன வளர்ச்சி

அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.


Tuesday, March 30, 2010

ம்ம்ம் அது ,,.... சின்ன கவுண்டரின் தீர்ப்பு


அரசியல்லுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்‌டேன். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா விழாக்களில் பங்‌கேற்பதை குறைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன், என்றார். இனி மேல் பாக் தீவரவாதி உடன் சண்டை போட யார் இருக்க ?

Monday, March 29, 2010

My Life and you


உயிர்ரைக் கொடுத்து உருவாக்கிய பெற்றோரை விட
உயர்ந்தவன் ஆகிறான் அவன் ................
இது தான் காதல்....

இப்படிக்கு என் தேவதை ,......................

Friday, March 26, 2010

Sweet Kiss


பல முறை படித்தும்
புரிந்து கொள்ள முடியாத
ஒரே கவிதை என்னவளுடைய
மௌனம் .....,,,

பல முறை சுவைத்தும் தீராத
சுவை உன் முத்தம் ......,,,,,
இப்படிக்கு என் தேவதை

என் தேவதையின் கவிதை , Sweet Heart


ஆயில் தண்டணை கூட சுகம்தான்
சிறை உன் இதயம் ஆக இருந்தால் ,.............................. இப்படிக்கு
என் தேவதை My Sweety.......,,,

Thursday, March 25, 2010

இந்தியா ஜனநாயகத்தின் விலை 3000 ரூபாய்


இந்தியா ஒளிர்கிறது

முன்பு தேர்தல் வந்தால் ஒரு பிரியாணி மற்றும் குவ்டார் இருந்தால் போதும், ஆனால் இன்று ரூபாய் 3000 தேவைபடுகிறது . இந்தியா வாழ்க



அவினாசி : ''ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார செல்வாக்கு காரணமாக பென்னாகரத்தில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை; வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே ஒப்புக்கொண்டுள்ளதால், தாராளமாக தேர்தலை நிறுத்தி விடலாம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூருக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் இடைத்தேர்தல் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. திருமங்கலம் 'பார்முலாவை' தி.மு.க., அமல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற புகாரும் வரத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியினர், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் ஆகியவற்றை தொடர்ந்து விரிவுபடுத்தி செல்கின்றனர். நேற்று முன்தினம் வரை பென்னாகரம் வாக்காளரின் சந்தை மதிப்பு 3,000 ரூபாய்.(ரொம்ப அதிகம்மா )வாக்காளர்களின் உரிமை, மிக கேவலமாக விலை பேசப்படுகிறது.


'வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை' என்று தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தையும் மீறி தவறுகள் நடக்கின்றன. தவறு நடப்பது தெரிந்தும் கூட, 'தேர்தலை நடத்த வேண்டுமா' என்பதை ஆணையம் யோசிக்க வேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியவில்லை என்றால், அதை ரத்து செய்வதில் தவறு ஏதுமில்லை என்றே கருதுகிறோம்.

போடுகம்மா வோட்டு க்வடார் பாட்டிலை பார்த்து .

Tuesday, March 23, 2010

என் தேவதையின் கவிதை My Angel Beautiful Lips


ஆத்திசூவடிகூட தெரியாதஎனக்கு
அகராதியின் ஆழத்தை உணர்த்தின
உன் கண்கள்
நிஎன்னைமரிக்க சொல்லிவிடு
ஆனால்மறக்க சொல்லிவிடாத.

உன்முத்தத்திற்கு காத்திருக்குது
என் உதடு உனக்கு திருப்பி தற.

: இப்படிக்கு என் தேவதை ,

ஏன் இந்த அவலம் என் நாட்டில் My India


புதுடில்லி : குடும்ப பெண் குஷ்பு புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்ச்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஓன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

தொடரும் ராயலின் ராஜ நடை IPL CRICKET


பெங்களூரு: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.


ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த தொடரின் 18 வது லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' ஜெயித்த சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது.


பவுலிங் மிரட்டல்: காலிஸ், மனீஷ் பாண்டே பெங்களூரு அணிக்கு துவக்கம் தந்தனர். சென்னை அணி கட்டுக் கோப்பாக பந்து வீச, ரன் சேர்க்க திணறியது பெங்களூரு. ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் காலிஸ், நேற்றைய போட்டியில் ஏமாற்றினார். இவர் (19 ரன்) பாலாஜி வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த டிராவிட் (14), முரளி சுழலில் அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய முரளி, பாண்டே (20) விக்கெட்டையும் கைப்பற்றினார். மிடில் ஆர்டரில் கோஹ்லி (24) ஆறுதல் அளித்தார்.


உத்தப்பா அதிரடி: பின்னர் களமிறங்கிய உத்தப்பா, அதிரடியில் மிரட்டினார். முதல் 17 ஓவர் வரை, பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி, கடைசி 3 ஓவரில் சொதப்பியது. 18 வது ஓவரை வீசிய அஸ்வின், 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். பாலாஜி வீசிய 19 வது ஓவரில் உத்தப்பா "ஹாட்ரிக் சிக்சர்' விளாச, 24 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் உட்பட, கடைசி 3 ஓவரில் மட்டும் பெங்களூரு 52 ரன்களை குவித்தது. 6 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசிய உத்தப்பா 68 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.


ஹைடன் "அவுட்': சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. வெறும் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார் பார்த்திவ் படேல். அடுத்து வந்த பெய்லி, ஒரு நாள் போட்டியை போல பந்துகளை வீணாக்கி வெறுப்பேற்றினார். இவர், 18 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் ஹைடன் (32), துரதிருஷ்டவசமாக ரன்- அவுட்டாக சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மிடில் ஆர்டரில் கேப்டன் ரெய்னா (9), முரளிவிஜய் (3) அடுத்தடுத்து அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தனர்.


பத்ரி ஆறுதல்: அடுத்து வந்த பத்ரிநாத், 31 ரன்கள் (5 பவுண்டரி ஒரு சிக்சர்) சேர்த்து ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய ஆல்பி மார்கல் (19), அஸ்வின் (11*) ரன் சேர்க்க திணற, 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூரு தரப்பில் வினய் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு வீரர் உத்தப்பா கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி (எதிர்-கோல்கட்டா) அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.


------------


முதல் முறை...
நேற்றைய போட்டியில் சென்னை பவுலர், பாலாஜியின் வேகத்தில், கிளீன் போல்டானார் பெங்களூரு அணி வீரர் காலிஸ் (19 ரன்). மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் காலிஸ், நேற்று தான் (5 வது போட்டி) அவுட்டானார். இதற்கு முன் விளையாடிய 4 போட்டிகளிலும்(65, 89, 44 மற்றும் 66) காலிஸ் "நாட்-அவுட்' நாயகனாகவே வலம் வந்தார்.
---------
பீல்டிங் சொதப்பல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பீல்டிங்கில் சொதப்பியது. உத்தப்பா 5 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினும், 25 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய்யும் "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட உத்தப்பா 68 ரன்களை குவித்தார்.
--------
அவர் வருவர ?.......
காயம் காரணமாக கேப்டன் தோனி, இல்லாத நிலையில் வெற்றி பெற திணறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. பீல்டிங்கிலும் வீரர்கள் சொதப்பி வருகின்றனர். தோனி வந்தால் மட்டுமே, தோல்வியின் பிடியிலிருந்து அணியை மீட்க முடியும். நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில், தோனி களமிறங்குவாரா என எதிர்நோக்கியிருக்கிறது சென்னை அணி.
--------
ஸ்கோர் போர்டு

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பாண்டே (கே) ரெய்னா (ப) முரளிதரன் 20 (28)
காலிஸ் (ப) பாலாஜி 19 (17)
டிராவிட் (ப) முரளிதரன் 14 (11)
உத்தப்பா --அவுட் இல்லை- 68 (38)
கோஹ்லி (ஸ்டெ) பார்த்திவ் (ப) முரளிதரன் 24 (16)
மார்கன் (ப) மார்கல் 1 (4)
பவுச்சர் -அவுட் இல்லை- 11 (7)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 5 விக்., இழப்பு) 171
விக்கெட் வீழ்ச்சி: 1-28 (காலிஸ்), 2-59 (டிராவிட்), 3-63 (பாண்டே), 4-110 (கோஹ்லி), 5-119 (மார்கன்).
பந்து வீச்சு:

மார்கல் 4-0-28-1,

தியாகி 4-0-19-0,

பாலாஜி 4-0-49-1,

முரளிதரன் 4-0-25-3,

அஸ்வின் 4-0-40-0.


சென்னை சூப்பர் கிங்ஸ்


பார்த்திவ் (கே) பவுச்சர் (ப) பிரவீண் 1 (3)
ஹைடன் -ரன் அவுட் (டிராவிட்) 32 (28)
பெய்லி (கே) பவுச்சர் (ப) வினய் 18 (27)
ரெய்னா (கே) காலிஸ் (ப) வினய் 9 (7)
விஜய் (கே) மார்கன் (ப) கும்ளே 3 (7)
பத்ரிநாத் (கே) சப்-அப்பன்னா (ப) வினய் 31 (17)
மார்கல் (ப) வினய் 19 (19)
அஸ்வின் -அவுட் இல்லை- 11 (10)
பாலாஜி -அவுட் இல்லை- 0 (2)
உதிரிகள் 11
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 135
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (பார்த்திவ்), 2-57 (ஹைடன்), 3-59 (பெய்லி), 4-71 (ரெய்னா), 5-74 (விஜய்), 6-107 (பத்ரிநாத்), 7-135 (மார்கல்).
பந்து வீச்சு:

பிரவீண் 4-0-21-1,

ஸ்டைன் 4-0-25-0,

கும்ளே 4-0-15-1,

காலிஸ் 4-0-29-0,

வினய் குமார் 4-0-40-4.

எனது பாரதம் புனித பாரதம் ( My Holy India )


அஞ்ச வேண்டாம் , அஞ்ச வேண்டாம் ! அகங்காரம் , போட்டி, பொறாமை ஆகியவற்றை விடவேண்டும் . பூமியை போல் எதையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் . இதை சாதித்துவிட்டால் உலகம் உங்கள் கால் அடியில் கிடக்கும் .
பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும், செய்து கொள்ளட்டும் ; நீ,
தூய்மை , ஒழுக்கம் , பக்தி இவற்றில் இருந்து விலகாதே ,............
மண்ணிலும் சரி , விண்ணிலும் சரி , மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே .
விதவையின் கண்ணீரை துடைக்கவும் , அனாதையின் வாய்க்கு ஒரு பிடி சோறு கொண்டுவந்து கொடுக்கவும் முடியாத ஒரு மதத்தில், தெய்வதிடம்மோ எனக்கு நம்பிக்கை இல்லை .....

Best Place in World ( உலகில் உன்னதமான இடம் )


தாயின் கருவறையும்,
காதலியின் மடியும் ,
தோழனின் மார்பும்,
பெண்களின் கற்பும் ,
இசையின் இருப்பிடமும்,
வீரனின் போர்களமும் ,
சிற்பியின் சிலையும் ,
மிக மிக புனிதமானது ......

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க. Beauty Care


உங்கள் அழகு முகத்தில் சுருக்கமா ? வைட்டமின் ஈ ஆயில் உடன் பாதாம் பருப்பை அரைத்து சேர்த்து , சிறிது எலுமிச்சை சாறு கலந்து , முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து, பயத்துமாவு போட்டு முகத்தை அலம்பி விடுங்கள் . இப்படி செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைவதோடு சருமும் சிக் என்று இருக்கும் . ரொம்ப அழகா இருக்கலாம் .

Monday, March 22, 2010

அழகு குறிப்பு


முகப்பரு உள்ளவர்களுக்கு முகம் முழு நிலவாக இருந்தாலும் , தழும்புகளும் . கரும்புள்ளிகளும் அழகை குழைத்து விடும் . இதற்கு வெட்டி வேரை . ஒரு பத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து ஒரு பிடி நறுக்கிய வேரை போட்டு அதை ஆவி பிடிக்கவும் . முகத்தில் உள்ள எண்ணெய் பசையை ஈடுத்தது விடும் . வெட்டிவேர் , வேப்பிலை .துளசி முன்றையும் உலர்த்தி பொடி செய்து அதை வெந்நீர் உடன் கலந்து பருக்கள் மீது வைக்க அவை உதிர்ந்து விடும் முகம் அழகு பெறும்.

Sunday, March 21, 2010

என் தேவதையின் கவிதை


என்னை அறிமுகபடித்திய அவளுக்கு நான் தந்த பரிசு அம்மா . இப்படிக்கு என் தேவதை.

Saturday, March 20, 2010

அழகுக்கு .....


கண்களில் கருவளையமிடுவது இரத்தம் கெட்டிருப்பதன் அறிகுறி , மருத்துவரிடம் ஆலோசித்து, இரத்த சுத்திக்கான மருந்து சாப்பிட வேண்டும். வைட்டமின் 'ஈ' ஆயிலை தடவி வந்தால் கருவளையம் மறையும். வெள்ளரி விதைகளை பொடி செய்து பன்னீரில் குழைத்து பூசி வந்தால் சுருக்கம் மறையும்.

பிச்சைக்காரர்களுக்கு பஞ்சாபில் அடையாள .அட்டை

பாட்டியாலா: பஞ்சாபில் பிச்சைக்காரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) வழங்க, அம்மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது.. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் பிச்சைக்காரர்களை புகைப்படம் எடுக்குமாறு, அந்தந்த பகுதி மூத்த அதிகாரிகளுக்கு புலனாய்வுத் துறை ஏ.டி.ஜி.பி., உத்தரவிட் டுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதால், மாநிலத்தில் நடைபெறும் சில கொடிய செயல்கள் தடுக்கப்படும் என, அரசு தெரிவிக்கிறது.

இதுகுறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்தே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தலில் பல்வேறு கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. குழந்தைகளை கடத்தி, அவர்களை உடல் ஊனமுற்றவர்களாக்கி, அவர்களை ரோட்டோரத்தில் பிச்சையெடுக்க வைக் கின்றனர். இவ்வாறான வழக்குகள், பஞ்சாப், இமாச் சல பிரதேசம், அரியானா மற்றும் டில்லி ஆகிய பல பகுதிகளில் இருந் தும் வருகின்றன. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க உள்ள மாநில அரசின் தற்போதைய திட்டம் மூலம் பிச்சைக் காரர்களை எப்போதும் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ நடை போடும் ராயல்


மும்பை :

கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்க ஐ.பி.எல்., போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து பிரிவிலும் தூள் கிளப்பிய பெங்களூரு அணி, நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. "மிடில் ஆர்டர்' வீரர்கள் சொதப்பலால், சச்சினின் மும்பை அணி முதல் தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கும்ளேவை கேப்டனாக கொண்ட, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
ஜெயசூர்யா அதிர்ச்சி:
மும்பை அணிக்கு வழக்கம் போல் சச்சின், ஜெயசூர்யா துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளில் ஏமாற்றிய ஜெயசூர்யா (2), இம்முறையும் சொதப்பினார். பின் வந்த தாரே (9) இரண்டு பவுண்டரிகளுடன் திருப்தியடைந்து, காலிஸ் பந்தில் வெளியேறினார்.
சபாஷ் வினய்:
ஸ்டைன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கினார் சச்சின். ஆனால் மறுமுனையில் திவாரியை (25) கும்ளே போல்டாக்கினார். பின் வினய் குமார் வேகத்தில் அம்பதி ராயுடு, 3 ரன்களில் அவுட்டானார். அடுத்த இரண்டாவது பந்தில், 25 ரன்கள் எடுத்திருந்த சச்சின், போல்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் (1) சிக்கினார். ஒரே ஓவரில் வினய் குமார் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஜாகிர் அதிரடி:
பின் வந்த சதீஷ், போலார்டு இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். பிரவீண் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த போலார்டு (21), ஸ்டைன் பந்தில் அவுட்டானார். 24 ரன்கள் எடுத்திருந்த சதீஸ், டிராவிட்டின் அசத்தலான "கேட்ச்'சில் பெவிலியன் திரும்பினார். ஹர்பஜன் (4) ஏமாற்றினார்.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜாகிர் கான், 9 பந்தில் 23 ரன்கள் (ஒரு சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து, ஐ.பி.எல்., தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. வினய் குமார், ஸ்டைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அபார துவக்கம்:
போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு காலிஸ், மனீஷ் பாண்டே ஜோடி, மீண்டும் ஒருமுறை அபார துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கான் பந்தில் மனீஷ் பாண்டே பவுண்டரிகளாக விளாச, மலிங்காவை காலிஸ் அடித்து நொறுக்கினார். இதே வேகத்தில் போலார்டின் முதல் ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அசத்தினார்.
பெங்களூரு வெற்றி:
அதிரடியில் மிரட்டிய மனீஷ் பாண்டே (40), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். காலிசுடன், உத்தப்பா இணைந்தார். அபார ஆட்டத்தை தொடர்ந்த காலிஸ், இத்தொடரில் 3வது அரைசதம் கடந்தார். உத்தப்பா (23), விராத் கோஹ்லி (17) விரைவில் திரும்பினர். பின் பெங்களூரு அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. காலிஸ் (66), மார்கன் (7) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை காலிஸ் தட்டிச் சென்றார்.


பாக்ஸ் செய்தி:
5 ரன், 4 விக்கெட்
நேற்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 9.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 5 ரன்கள் எடுப்பதற்குள், திவாரி, ராயுடு, சச்சின் மற்றும் பிராவோ என அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை (76/6) இழந்து திணறியது.


"நாட் அவுட்' நாயகன் காலிஸ்
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் தென் ஆப்ரிக்காவின் காலிஸ். இதில் இதுவரை பங்கேற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இவர் (65, 89, 44 மற்றும் 66) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்து, "நாட் அவுட்' நாயகனாக வலம் வருகிறார்.

ஸ்கோர் போர்டு

மும்பை இந்தியன்ஸ்


ஜெயசூர்யா-எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 2(5)
சச்சின்(ப)வினய் குமார் 25(22)
டாரே(கே)பாண்டே(ப)காலிஸ் 9(10)
திவாரி(ப)கும்ளே 25(21)
ராயுடு(கே)பவுச்சர்(ப)வினய் குமார் 3(4)
பிராவோ-எல்.பி.டபிள்யு.,(ப)வினய் குமார் 1(2)
சதீஷ்(கே)டிராவிட்(ப)ஸ்டைன் 24(22)
போலார்டு(கே)கோஹ்லி(ப)ஸ்டைன் 21(19)
ஹர்பஜன்(கே)காலிஸ்(ப)பிரவீண் 4(6)
ஜாகிர்-அவுட் இல்லை- 23(9)
மலிங்கா-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 9 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-6(ஜெயசூர்யா), 2-36(டாரே), 3-71(திவாரி), 4-74(ராயுடு), 5-75(சச்சின்), 6-76(பிராவோ), 7-123(போலார்டு), 8-125(சதீஷ்), 9-135 (ஹர்பஜன்).
பந்துவீச்சு: பிரவீண் 4-0-37-1, ஸ்டைன் 4-0-26-3, காலிஸ் 4-0-35-1, வினய் குமார் 4-0-25-3, கும்ளே 4-0-18-1.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பாண்டே(கே)போலார்டு(ப)ஹர்பஜன் 40(27)
காலிஸ்-அவுட் இல்லை- 66(55)
உத்தப்பா(கே)மலிங்கா(ப)ஜாகிர் 23(15)
கோஹ்லி--ரன் அவுட்-(போலார்டு) 17(12)
மார்கன்-அவுட் இல்லை- 7(6)
உதிரிகள் 2
மொத்தம் ( 19.1 ஓவரில் 3 விக்.,) 155
விக்கெட் வீழ்ச்சி: 1-85(பாண்டே), 2-116(உத்தப்பா), 3-136(கோஹ்லி).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-18-1, மலிங்கா 4-0-25-0, பிராவோ 3.1-0-35-0, போலார்டு 2-0-24-0, ஹர்பஜன் 4-0-35-1, ஜெயசூர்யா 2-0-16-0.


புள்ளிப்பட்டியல்
மும்பையை வீழ்த்திய, பெங்களூரு அணி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
பெங்களூரு 4 3 1 6 +1.212
மும்பை 3 2 1 4 +1.520
சென்னை 3 2 1 4 +0.604
டெக்கான் 3 2 1 4 +0.433
கோல்கட்டா 4 2 2 4 --0.906
டில்லி 4 2 2 4 -1.027
ராஜஸ்தான் 4 1 3 2 -0.953
பஞ்சாப் 3 0 3 0 -0.380
* மும்பை-பெங்களூரு இடையிலான போட்டி வரை

அழகு குறிப்புகள்

சுத்தமான நல்லெண்ணெய் சிறிது தண்ணீர் சேர்த்து கைகளில் வைத்து
பரபரவென்று தேயுங்கள். மெழுகுபோல் நுரைத்து வரும் , அந்த எண்ணை நுரையை தடவி, தேய்க்க முக சுருக்கம் காணாமல் போகும். சருமமும் பட்டுபோல் பளபளவென்று மின்னும்.

தமிழ்

அம்மா

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗